×

மூதாட்டியிடம் 14 பவுன் திருட்டு

 

தொண்டி, செப்.12: தொண்டி அருகே மூதாட்டியிடம் 14 பவுன் நகையை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தொண்டி அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். வியாழக்கிழமை இரவு தங்கி வெள்ளி கிழமை சாமி கும்பிடுவது கூடுதல் சிறப்பு என்பதால் அந்த நாளில் கூட்டம் அதிகம் இருக்கும்.

கடந்த வாரம் மதுரையிலிருந்து வந்தாக கூறி ஒரு பெண் இக்கோயிலில் தங்கியுள்ளார். அப்போது கோயிலின் அருகில் பாத்திரக்கடை வைத்துள்ள ராமு மனைவி தனலெட்சுமியுடன்(60) நெருங்கி பழகியுள்ளார். நேற்று காலை கடையில் இருவரும் இருக்கும் போது தனலெட்சுமிக்கு மயக்க மருந்து போல் ஒன்றை தூவி விட்டு பீரோவில் இருந்த 14 பவுன் நகையை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மூதாட்டியிடம் 14 பவுன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tondi ,Thondi ,
× RELATED தொண்டியை குளிர்வித்த மழை